கவிதைமணி

வேலி தாண்டிய காற்று!  - வேலூர். மூ.மோகன்

கவிதைமணி

இதமாய்  வருடும் காற்றுதான்
இனிய தென்றலாய்  மணம் வீசும்!
அதுவே ஆவேசத் தாண்டவமாட-
அசுரப் புயலாய் உருமாறும்!

உலகையே புரட்டிட நினைக்கும்  மனம்
உடலில் காற்று இருக்கும்வரைக்கும்!
அலையோய்ந்த கடலாகும் அதுவே
'அந்தி'யில் எங்கோ பறந்து போனதும்!

பாதை தவறும் பிள்ளைகளோடு
'போதைக் கணவனை'யும் திருத்திட
இதமாய் தென்றலாய் வருடாது
சுழலும் சூறையால் பயனேது?

அவசர முடிவுகள் அனைத்துமே
அள்ளித் தெளித்த கோலமாகும்!
எதிலும் பொறுமை தேவையென
இயற்கை சொல்லும் பாடமாகும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

SCROLL FOR NEXT