கவிதைமணி

பட்டதாரி : அழகூர். அருண் . ஞானசேகரன்

கவிதைமணி
பட்டதாரி   என்றாதல்   பவித்திரமாம் ; கல்லாமல்விட்டுவிட   பின்னாளில்   வேதனையே ! ---- நட்டமுறக்காண்பதைத்   தவிர்ப்பதுவே   கடமையென   உணராமல்மாண்புதனை   இழக்கத்தகு   மா ?கல்விதரும்   சிறப்பெல்லாம்   காலத்தால்   அழியாதாம்,செல்வாக்கைத்   தருவததன்   சிறப்பாகும் ! ---- பல்கலையில்தேர்ந்துவிடக்   கிட்டுவதும்   தீர்க்கமின்றி   வேறில்லை ,வேறெதுதான்   இணையாகும்   விளம்பு !இளமைதனில்   கற்காமல்   இருந்துவிட   வாழ்க்கைக்களமதிலே   வெற்றிதனைக்   காணுவமோ ? ---- விளக்கமிதைஊட்டுவதே  அதன்பெருமை ,  உன்னதநற்   கல்விகற்றோர்நாட்டின்முது   கெலும்பென்றே   நம்பு !உற்றநற்   பலமென்றே   உலகவர்   ஏற்றதெலாம்கற்றிட்ட   நன்றானக்   கலவியையே ! ---- பெற்றிட்டசெல்வங்களில்   இன்னதுவே   சீர்பெருமை   மிக்கதெனஎல்லோரும்   கூறுவர்   இசைந்து !இளமதனில்   கல்வியதும்   எட்டிக்காய்   என்றாகும் ;உளமிதனைத்   தவறெனவே   உணரட்டும் ! ---- விளக்கமிதைஊட்டுவதே   பெற்றவர்தம்   உன்னதநற்   கடமை அதேமாட்சிதனைக்   கூட்டுவிக்கு   மாம் !உன்னதநற்   கல்வியதே   உயர்வூட்டும்   புகழ்கூட்டும் ;இன்னதனை   மனம்மறக்கா   திருக்கட்டும் ! ---- மன்னவராய்,இம்மண்ணை  ஆண்டவர்கள்  இருப்பிடங்கள்  தெரியவில்லைகம்பனுக்கு   இருப்பதனைக்   காண் !கல்வியெனும்   செல்வமது   கரையாதாம்   மறையாதாம்  ;எல்லையற்ற   புகழ்கூட்டும்   என்னாளும் ! ---- செல்வக்களஞ்சியத்தை   ஈட்டித்தரும் , காலமெலாம்   துணைநிற்கும் ;விளக்கமதை   மறப்பதுவும்   வீண் !கற்றறிந்த   அறிஞர்தமை  கலங்கரை   விளக்கமென்பார் ;உற்றநல்  அறிஞர்தமை   உலகறியும் ! ---- மற்றவர்போல்மட்டற்ற   புகழ்கண்டு   மன்றமதில்   தலைநிமிர்ந்திடபட்டதாரி   என்றாகப்   பார் !                

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜுலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு

SCROLL FOR NEXT