கவிதைமணி

பட்டதாரி: வ. இசக்கி ராஜு

கவிதைமணி

பட்டதாரி
கல்யாணச் சந்தையிலே
விலை போக வேண்டி
எனை
விலை பேசி விட்டு வந்தார்
கல்விச் சந்தையிலே

அப்பப்பா !

அடி மாட்டுக் கூட்டத்திலே
நானுமொரு அடி மாடாய்
கல்லூரி யெனும்
கெட்டிலிலே.

படித்த எனக்கும் புரியவில்லை
பாடம் எடுத்தவனுக்கும்
விளங்கவில்லை
ஆனாலும் நான் பட்டதாரி

கணக்கு பார்க்க ஒரு கூட்டம்
காசு பார்க்க ஒரு கூட்டம்
கடை தெருவில்
விழி பிதுங்கி
நிற்பதென்னவோ கல்வி மட்டும் தான்.

அறிவுப் பசி மேல் எழும்ப
வயிற்றுப் பசி கீழ் இழுக்க
வறுமைக் கோட்டில் மயங்கிச் சாயும்
அவல நிலை மாறிடனும்

கடைச் சரக்காய் மாறி விட்ட
கல்வித் தரம் உயர்ந்திடனும்
சேர்ந்திழுப்போம் கல்வித் தேரை..     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜுலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு

SCROLL FOR NEXT