செல்லாக் காசு: கவிஞர் "இளவல் " ஹரிஹரன்
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:15 AM
நாணயமில்லாச் சொற்களெல்லாம்
நடப்பினிலே என்றென்றும்
செல்லாக்காசுகளே......
உயிரில்லா உடம்பும்
ஒருபோதும்
செல்லுபடியாவதில்லை....
இன்றைக்குச் செல்லுபடியாவது
என்றைக்கும் செல்லுபடியாகும்
என்னும் நிலைமை
இருப்பதில்லை என்றும்......
Advertisement
காலம் மட்டும்
செல்லுபடியாகிக் கொண்டிருப்பதால்
செல்லாக்காசு செலாவணியாவதில்லை......
சில்லறைகளின் மதிப்பாவது
தேறிவிட வாய்ப்புண்டு....
செல்லாக்காசுகளின்தாட்களோ
சிறிதும் தேறுவதேயில்லை.......
அழிந்துபோகும்
எல்லாவற்றின் நிலைமையும்
இப்படித்தான்.....ஒரு நாள்
செல்லாததாகிவிடும்....
உயிர் உட்பட......!