முகப்பு
கவிதைமணி

செல்லாக் காசு! -ரெத்தின.ஆத்மநாதன்

Updated On : 21 நவம்பர், 2016 at 5:57 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:15 AM

பணக்காரன்  வீட்டுப்  பிள்ளையாய்
பஞ்சு மெத்தையில் பிறந்திருந்தாலும்
பாரினில்  கடமை யாற்றும்
பக்குவம் நீ பெறாவிட்டால்
ஊராரும் உற்றாரும் உறவினரும் 
உனக்கிடும் பெயர் "செல்லாக்காசு!"

பட்டங்கள் பல பெற்றாலும்
பவித்திரமாய் வாழக் கற்றாலும்
வேதங்கள் தனை யுணர்ந்து
வேதியராய் வாழ்ந்த போதும்
பணம் பண்ணத் தெரியாவிட்டால்
பார் உனக்கு  வழங்கும் பெயர்  "செல்லாக் காசு!"

ஓடக்காரனிடம் உலகறிந்த அம்முனிவர்
வேதம் பாரதம்  விஷயமுள்ள  பல நூல்கள்
கற்றும் கேட்டும்  அறியாத  உன் வாழ்க்கை 
"செல்லாக் காசென்றே" சில்மிஷம் செய்திட
ஓட்டை வழியே  உள் வந்த  நீர் கண்டு 
நீச்சல் அறியா "உம்வாழ்வும் செல்லாக்காசே"என்றான்!

Advertisement

பரணில் பெட்டியில்  பாதாள  அறைதனில்
வங்கி லாக்கரில்  வரவேற்பறை  அலமாரியில்
பர்சில் பாக்கெட்டில்  பாத்திரங்கள்  சிலவற்றில்
தாத்தா  அத்தை பாட்டி  வீடுகளில் 
ஒளித்து வைத்திருந்த  ஐநாறு ஆயிரம்  அத்தனையும்
ஒன்பதாம் தேதி  காலை முதல்  "செல்லாக் காசே!"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.