புதையல்: சசி எழில்மணி
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:18 AM
மண்ணுள்ளே புதைந்தது
பலநாள் கிடந்தது
முன்னோர் வாழ்க்கையின்
தரத்தைக் கூறும்
புதையுண்ட பொருட்கள் யாவும்
வரலாற்றைப் பறைசாற்றும்
செல்லாத காசுக்கும்
மதிப்புகள் மேலோங்கும்
ரகசியம் அறிந்தவர்
தூக்கம் தொலைப்பர்
புதையலை சொந்தமாக்க
துடியாய்த் துடிப்பர்
Advertisement
பசுமை நினைவுகளும்
மனதில் படிந்திருக்கும்
புதைந்திருக்கும் உண்மைகள்
ஒரு நாள் வெளிவரும்
நினைவுகளை திரும்பிப் பார்க்க
காலமும் பொன்னாய் தோன்றும்
வெளிவரும் காலம்
வரவில்லை யெனினும்
மனதோடு இருந்தது
மண்ணுள்ளே புதைந்திடும்
மனம் சொல்லா புதையலாய்