முகப்பு
கவிதைமணி

புதையல் : கே.நடராஜன்

Updated On : 28 நவம்பர், 2016 at 2:58 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:18 AM

கையில் இருக்கும் பொருளின் மதிப்பு தெரியாது நமக்கு 
அது மண்ணுக்குள் புதையும் வரை ... உறவுகளும் 
இதில் அடங்கும் !  அன்பும் ஆதரவும்  தேடும் 

முதியோரை உனக்கு கிடைத்த  புதையலாக  
நினைத்து அரவணைத்தால் வேறு  எந்த ஒரு புதையலையும் 
தேடி என்றும் அலைய வேண்டாம் தம்பி நீ !

காலம் மாறும்!  காட்சியும் மாறும்!  நீயும் ஒரு 
புதையலாக தெரிய வேண்டும் ஒரு நாள் உன் பிள்ளைக்கு!..இந்த 
புதையல் மட்டும் மண்ணில்  புதையாமல் வளர வேண்டும்
ஒரு மரமாக உன் வீட்டில் என்றும் ! புதையல் மரம் 
துளிர்த்து தளிர்த்து வளர விதைத்திடு ஒரு விதை  நீ இன்று !

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.