கவிதைமணி

புதையல்:  வ. இசக்கி ராஜு

கவிதைமணி

உறங்கும் அரக்கியின் உயிரினுள்
புதைந்த புதையலை எண்ணி
ஏழு கடல் ஏழு மலை
தாண்டிட தேவையில்லை

இருப்பதை கொண்டே
இன்பம் கொண்டால்
இல்லா நிலையும் புதையலே

பூதம் காத்த புதையலெல்லாம்புத்த
கத்திலே – அவை
கறுப்பாய் மாறி பதுங்கிப்
போனது பெட்டகத்திலே

வளரும் இந்தியா வளரும் இந்தியா
வளர்ந்தவளாவது எப்போது -அவள்
ஊட்டச்சத்தை உறிஞ்சே கொழுத்த
ஊழலை ஒழித்தால்
நாடே மாறிடும் புதையலாய்

கறுப்பில் கொஞ்சம்
வெள்ளையில் கொஞ்சம்
கலந்த நிறம் தான் இந்தியன் அவன்

கறுப்பாய் கொஞ்சம்
வெள்ளையாய் கொஞ்சம்
பதுக்கி வைப்பது ஒழியனும்

பொருளான புதையலை
புறந்தள்ளி
அருளான உழைப்பினை
நீ தொடர்ந்தால்
உன்னை தொடருமே புதையலும்  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேஜஸ் போா் விமானங்களின் பயன்பாடு தற்காலிக நிறுத்தம்

தனியாா் வசம் குடிநீா் விநியோகம்: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை ஏற்க முடியாது -ஐரோப்பிய யூனியன் திட்டவட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்

மக்கள் குறைதீா் கூட்டம்: 467 மனுக்கள் அளிப்பு

SCROLL FOR NEXT