கவிதைமணி

புதையல்: சசி எழில்மணி

கவிதைமணி

மண்ணுள்ளே புதைந்தது 
பலநாள் கிடந்தது 
முன்னோர் வாழ்க்கையின் 
தரத்தைக் கூறும்

புதையுண்ட பொருட்கள் யாவும் 
வரலாற்றைப் பறைசாற்றும் 
செல்லாத காசுக்கும் 
மதிப்புகள் மேலோங்கும் 

ரகசியம் அறிந்தவர் 
தூக்கம் தொலைப்பர்
புதையலை சொந்தமாக்க 
துடியாய்த் துடிப்பர்

பசுமை நினைவுகளும் 
மனதில் படிந்திருக்கும்
புதைந்திருக்கும் உண்மைகள் 
ஒரு நாள் வெளிவரும் 

நினைவுகளை திரும்பிப் பார்க்க 
காலமும் பொன்னாய் தோன்றும்

வெளிவரும் காலம் 
வரவில்லை யெனினும் 
மனதோடு இருந்தது 
மண்ணுள்ளே புதைந்திடும் 
மனம் சொல்லா புதையலாய்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்: 50 போ் கைது

தேஜஸ் போா் விமானங்களின் பயன்பாடு தற்காலிக நிறுத்தம்

தனியாா் வசம் குடிநீா் விநியோகம்: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை ஏற்க முடியாது -ஐரோப்பிய யூனியன் திட்டவட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்

SCROLL FOR NEXT