முகப்பு
கவிதைமணி

பொம்மைகள்: ரீகன் •ஜெய்குமார்

Updated On : 4 பிப்ரவரி, 2019 at 12:51 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:57 PM
வயல்வெளிநடுவில்முரட்டு கண்களோடுகாவல் நிற்க்கும்சோளகாட்டு பொம்மையைதாத்தாவின் விரல் இருகபிடித்து வரப்பில் ஒளிந்து எட்டி எட்டி பார்த்த நாட்கள்...!ஊரே ஒன்றுக்கூடும்திருவிழாக்களில்புது புது சொக்காய் போட்டுதுள்ளி குதிக்கும் சிறுவர் சிறுமிகளை கைதட்டி அழைத்துகையில் கடிகாரம் வாயில் மீசைபோட்டுவிட்டு மகிழ செய்யும் ஜவ்வுமிட்டாய்காரனின் தோளில் இருக்கும் பொம்மை...!!ஆதி கால வரலாற்றுகளை அனைவருக்கும் எடுத்துகூறும் தோள் பொம்மை நாடகங்கள்காண இயலுமா இனி அவை யாவையும்காலங்கள் காற்றில்வேகமாய் கரைந்திடமாறிபோனது எல்லாம் இப்போதெல்லாம் எங்கேகாணமுடிகிறது பொம்மைகளைஅரசியல் கலவரங்களில் எரிக்க மட்டுமே பொம்மைகள் உபயோகிக்கப்படுகின்றன என்பதுதான் வேதனைகல்வி கற்க்கும் காலத்திலேயேகையில் கைபேசி தனக்கு தானே தலையை ஆட்டிக்கொண்டு பொம்மைகள் ஆனார்கள் குழந்தைகள்...!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.