கவிதைமணி

மனம் எனும் மாயப் பேய்: கா.ந.கல்யாணசுந்தரம் 

கவிதைமணி
கண்மூடி தியானிக்கும் 
விழிகளின் கட்டுப்பாட்டில்
எண்ண அலைகள்...!
ஒரு பிரபஞ்சத்தின் 
அந்தரங்க மொழி 
மௌனம்தான் !
இழையோடிய புன்னகை 
எதிர்வரும் இன்னல்களை 
இல்லாமலாக்கும் !
நற்சிந்தனைகள் 
வளமானவாழ்வின் 
நாற்றங்கால்கள் !
ஓசையின்றி ஓடும் 
காலநதியில் 
ஆசைப்படகுகள்
இலக்கின்றி பயணிக்க... 
ஐம்புலன்களையும் 
அடக்கி ஆளா மானுடம் 
தினம் தினம் இழக்கிறது 
‘சும்மா’ இருக்கும் சுகம்தனை .... 
மனம் எனும் மாயப்பேயின் 
பிடிக்குள் அகப்பட்டு !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT