ஜன்னல் நிலா: சசி எழில்மணி
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:03 AM
நிலவே உன் கரங்கள் தீண்டிடஇனம் புரியா இன்பங்கள்எனை வந்து தாக்குதேகாரிருள் மேகங்கள்நடனங்கள் ஆடிடஇரவில் உன் குளிரொளிஇதமாய் என்னை வாட்டுதேஇமைகள் மூடாமல்உன்னையே பார்த்திருக்கஆசைகள் புதிதாய்த் துளிர்க்குதேபனித்துளிப் போர்த்தியப் புல்வெளிபோல்உள்ளம் ஏனோ நனையுதேஇரவின் மடியில் நான் படுக்கபால் மழை பொழிந்துநீ என்னைத் தாலாட்டஉன் சிரிப்பொலிக் காட்டிநீ என்னைச் சீராட்டவிண்ணில் உலவிமண்ணில் ஒளிவீசிகண்ணில் தெரியும்ஜன்னல் நிலவேநீ இல்லாத நாட்களில்நானும் தேய்கிறேன்