கவிதைமணி

நெல்லுக் கிறைத்தநீர்: ஆர்.அருண்குமார் 

கவிதைமணி

ஆனந்தம் நிறைந்திடும்!
செய்வனயாவும் சிறப்பாக இருப்பின்
சிர்மிகு வெற்றி நிச்சயம் கிட்டும்.
பொய்யுரை பரப்பினால் பாதகம்
போகாத ஊருக்கு வழி காட்டும்.
 
நல்லது செய்தால் நலமே கிட்டும்
நானிலம் போற்றிடும் நிச்சயம்.
அல்லது செய்வாருக்கு இன்னல்தான்
அசையாத சொத்தாகும் கேளாய்.
 
விளையாத நிலத்தில் நீரிறைத்தால்
வீணருக்கு உதவுதல் போலாகும்.
நெல்லுக்கு நீர் இறைத்தால்தான்
நிறைந்திடும் விளைச்சல் நிறைவாய்.
 
பொருளறிந்து பேசினால் இன்பமே
புரியாவிடில் விழலுக்கு இறைத் நீரே.
அருள்நிறைந்த மனதில் அன்புதந்தால்
ஆனந்தம் நிறைந்திடும் வாழ்க்கையில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

திருவானைக்காவல் கோயிலில் தோ்கள் வெள்ளோட்டம்! அம்மன் தேரின் அச்சாணி மீண்டும் பழுது!

SCROLL FOR NEXT