தண்ணீருக்கு இரத்தம்: செல்வா
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:48 PM
கரைப் புரண்டு ஓடிய நீயும்கரைப் பக்கம் வந்துஎத்தனை நாளாச்சு கரையெல்லாம்இப்ப கள்ளி செடிகள்அப்படி வந்தாலும்உன்னை குழியில் தள்ளமணலை அள்ளி வித்தாச்சுஇன்னும் புரியவில்லை எங்கதலையெல்லாம் ஏன் மண் ?தப்பி இருந்தாலும்உன்னை கறையாக்கஇரசாயன கழிவை கலந்தாச்சுவாழ்வே இனி என்றும் இரசாயன மருந்து மட்டும்நீ வந்தாலும் வாராவிட்டாலும்உன்னை நம்பிஅரசியல் பலநாள் பண்ணியாச்சுநீ வாராவிட்டாவிளைகாடெல்லாம் சுடுகாடுஎத்தொடும் சேரும் தண்ணீருக்குவண்ணம் இப்ப வந்தாச்சுதண்ணீருக்கும் இரத்தம்சித்தம் கலங்கபலிகள் உண்டாச்சுஇரத்தமே இங்க மலிவாச்சு