முகப்பு
கவிதைமணி

தண்ணீருக்கு இரத்தம்: தகடூர்செவ்வியன்

Updated On : 19 செப்டம்பர், 2016 at 5:21 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:48 PM
கண்ணீரும் செந்நீரும் சிந்திப் பெற்றசுதந்திரம் இன்று மீண்டும்கண்ணீரில் மூழ்கித் தத்தளிக்கிறதுதண்ணீர் வேண்டி…தரமறுக்கிறான் கர்நாடகன்அணைகட்டி ஆனை போர்அடிக்கநினைக்கின்றான் கேரளத்தான்…அடிமைதனத்தை ஆடம்பரமாக்கிஆட்டிப்படைக்கும் ஆந்திரன்செம்மரக் கடத்தலென்று கூறிதமிழனின் செங்குருதியைவெட்டிஉறிஞ்சுகின்றான்...எங்கே சென்று கொண்டிருக்கிறதுஇந்த புதிய யுகம்…வானமும் பொய்த்துத் தமிழனின்மானமும் பொய்த்துதண்ணீருக்காய் இரத்தம் சிந்திஉயிரையும் சிந்துவதா?“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர்”என்னும் வள்ளுவனின் வாக்கு கூடபொய்யாய்ப் போனதோ?உழுபடை தூக்கிய மாந்ரெல்லாம்பெண்டு பிள்ளையின் அழுபடை கேட்டுஉறங்கினரே நிரந்தரமாய்…என்று தீருமோ இந்ததண்ணீரின் தாகம்என்று மாறுமோ எங்கள் விவசாயக்குடிகளின் வருமையின் சோகம்…

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.