நீதியைத் தேடி: அ.வேளாங்கண்ணி
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:50 PM
இல்லாத ஒன்றைத் தேடுவது தானேமனித இயல்புநீதியும் இங்கு இல்லாமலே போனதோ..தேவையில்லா வஞ்சனைகள் எல்லாம்புற்றாய் வளர்ந்திருக்கும்போது..நீதி புயலாய் அடித்து களைப்பதுதானே முறை..ஆனால் அதுவோதென்றலாய் தவழ்ந்து கொண்டுள்ளதுஇருந்தும் இல்லாதது போல்ஒரு வேசம் போட்டுள்ளதுஇல்லாதோருக்கு அது இல்லாமலேபோய்விட்டதுஇருப்போருக்கோ காலடியில்கிடக்கிறதுநீதியின் பிடி இறுக்கும்போதுதான்நல்லவர்கள் நடமாட முடியும்..இங்கு நல்லவர்கள் நடமாட வழியேஇல்லைஏனெனில் நீதிப்பெண்கண்களைக் கட்டிக்கொண்டுஅவர்கள் கைக்கு எட்டாத்தூரத்தில்ஒளிந்து கொண்டுள்ளாள்..அழைப்போரின் குரலோஅழுவோரின் கண்ணீரோஅவளை அசைக்கப் போவதில்லை..ஏனெனில் அவளுக்கு ஜீவனுள்ளதாஇல்லையா என்பதுஅவளுக்கே மறந்து போய்விட்டது...