"நீதியைத் தேடி" ரீகன்•ஜெய்குமார்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:50 PM
நிகழ்கால
இவ்வுலகில்
நித்தமும்
நீதி கேட்டு அழைகிறது நதி
நதியின் நீர் என்பது மேலாடை
அதில் மணல் என்பது உள்ளாடை
சமூக விரோத திருடர்களால் இ
ரண்டையும் உருவி
அம்மணமாய் இருக்கிறது நதி
மானம் கெட்டுபோனது தமிழர் நிலம்
நீதி கேட்டு போனால்
நிலைகுழைந்து நிற்கிறது
நீதி வழங்க நீதிமன்றம்
பெட்டி நிறைய காந்தி
கட்டுக்களை பெற்று கொண்டு
வலியவனுக்கே
நீதி எழுந்து நிற்கிறது
வாடி நிற்பவனுக்கு நீதிமன்றத்தின்
நிழல் கூட தூரமானதுதான் கொடுமை.