கவிதைமணி

நீதியைத் தேடி: முனைவர். சி. அருள் ஜோசப் ராஜ்

கவிதைமணி
நெஞ்சுரமும் நேர்மையும் யின்றி நாட்டில்  நெகிழிப்பை போலவேதான் வஞ்சனைகள் நெஞ்யிறுக்கி செய்வார்கள்! நன்மை தீமை  நெறியறிந்தோர் நிதிபெற்றே சதிகள் செய்வார்!கொஞ்சமும் நேயமின்றி மதிமறந்தே    கொள்கைநீக்கி கொலைகொள்ளை விரும்பிச் செய்வார்!தஞ்சமென வருவோற்கே வஞ்சகமே      தக்கதொரு சமயத்தில் செய்திடுவார்!விஞ்சுகின்ற சுயநலத்தால் தாயின் பாசம்,  விரைந்தேதான் மறப்பார்நற் தந்தை நேசம்நஞ்சுகொண்டு வகுப்பாரே கொல்லத் திட்டம்!   நயமுடனே பேசியேதான் ஏய்ப்பார் நம்மைபஞ்சொத்த மென்மையாலே மறைப்பார் உண்மை!   பழிசொல்லி அவரும்தான் பெறுவார் நன்மை!எஞ்ஞரன்ரும்  ஏமாற்றிப் பிழைப்ப தாலே   என்னலாபம் கிட்டிவிடும் அறிவார் நன்றே!கொஞ்சமும் உழைக்காமல் பொருள் சேர்க்க    கொடுஞ்செயல்கள் செய்வதற்க்கும் தயங்க மாட்டார்வாஞ்சையுடன் கைகூலி எதையும் செய்வார்!   வானகத்து காற்றதனில் நஞ்சும் சேர்ப்பார்!தீஞ்சொல்லால் பிறர் மனதை புண்ணாக்கி தான்    தீயபல விளைவுகளைத் தருவார் நித்தம்!விஞ்சான அறிவாலே இணையத்திலே         வியக்குகின்ற  மோசடிகள் பலவே செய்வார்.!வஞ்சகரை எண்ணியே   நீதி தேட வந்துநின்றாள் நீதிதேவதை  கண்கள் மூடி!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT