மேகத்தில் தாமியாய்,
மின்னலோ பூக்காதோ?
இடிகளும் அதைக்கண்டு-தன்
இதழ்களால் சிரிக்காதோ?
வானத்தின் கைபேசி,
வங்கத்தின் அலையுடுத்தி,
கோடை முகில் கடத்தாதோ?-மழை
குறுஞ் செய்தி பொழியாதோ?
தூறலென முகநூலில்,
தூரிகையால் கிறுக்கிவிட்டால்,
பூமியெங்கும் பகிரச்சொல்லி-அதை
புல்லினங்கள் கேட்காதோ?
வானவில் தேவதையும்,
வருணனை காதலிக்க,
கட்செவி அஞ்சல் கொண்டு-இனி
காற்றினில் பறக்காதோ ?
புஞ்சையும் நஞ்சையுமே,
புதுமழை செயலிகளை,
பதிவிறக்கம் செய்யாதோ ?-அதை
பசுமைகொண்டு களிக்காதோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.