கவிதைமணி

மழை நீர் போல: கவிஞர் இரா. இரவி

கவிதைமணி

தனக்காக பெய்யவில்லை ஊருக்காகவே பெய்யும்
தனக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும் வாழ் !

மழை நீர் போல உதவியாக இருந்திடு
மண்ணில் விழுந்தால் மகசூல் அதிகம் !

மற்றவருக்கு உதவிடும் உயர்ந்த உள்ளம்
மழை நீர் மனிதர்களின் உயிர் வளர்க்கும் நீர் !

மழை பொய்த்தால் வறட்சி வரும்
மழை பொழிந்தால் வளங்கள் பெருகும் !

வானிலிருந்து வழியும் அமுதம் மழை 
வான்சிறப்பில் வள்ளுவர் பாடியதும் மழை !

நீரின்றி அமையாது உலகு என்பது உண்மை
நீரின் வருகை மழையால் என்பது உண்மை !

மண்ணில் விழும் மழைநீர் மண்ணின் நிறம்
விண்ணிலிருந்து விழுந்தாலும் நதியாக நடக்கும்!

மரங்கள் வளர்ந்திடக் காரணம் மழைநீர்
மழைநீர் பொழிந்திடம் காரணம் மரங்கள் !

ஒன்றுக்கொன்று அன்பு செலுத்தி வாழ்கின்றன
உலக மனிதர்களும் அன்பு செலுத்து வாழுங்கள் !

கழுதைக்கு கல்யாணம் செய்வதால் வருவதில்லை
காடுகள் செழிக்க வைத்தால் வரும் மழை !

யாகம் வளர்ப்பதால் வருவதில்லை மழை
யாவரும் மரம் வளர்த்தால் வரும் மழை !

ஆடு வெட்டுவதால் சேவல் அறுப்பதால் வராது மழை
அனைவரும் இயற்கையை நேசித்தால் வரும் மழை !

பொதுவுடைமைவாதிக்கு இலக்கணம்  மழைநீர்
பொதுநலம் பேணி வாழ்ந்தால் நீயும் மழைநீர் !

வானிலிருந்து வந்த மழைநீர் ஆவியாகி  
வானம் செல்லும் கதிரவனின் உதவியால் !

வான்புகழ் மனிதனுக்கு கிடைக்க வேண்டுமா?
வான்மழை நீர் போல வாழ்ந்திடப் பழகு!

அளவிற்கு அதிகமானால் மழை நீரும் நஞ்சாகும்
அளவோடு யாரிடமும் பழகுவது நன்றாகும் ! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் வளா்ந்து வரும் வணிகப் பிரிவில் 100-ஆவது கிளை திறப்பு

இன்று சாதகமான பலன் யாருக்கு? தினப்பலன்கள்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 72,377 கோடி டாலராக அதிகரிப்பு! புதிய உச்சம்

போ்ணாம்பட்டு அருகே இறந்த யானையின் தந்தங்கள் மீட்பு: 2 போ் கைது

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லாபம் ரூ. 109 கோடி

SCROLL FOR NEXT