நிலா விடு தூது: பொன். குமார்
நிலாவைத் தூது அனுப்பியவர்கள.
நம் முன்னோர்கள்.
புறாக்களும் போனதாக
புராணங்கள் சாட்சியாக உள்ளன.
தோழி தோழரைத்
தூது அனுப்பியவர்களும் உண்டு.
காலம் கடந்த தால்
தபால் கார ர் மூலம்
தூது சென்றன
கடிதங்கள் .
தொழில் நுட்ப முன்னேற்றத்தைத்
தொடர்ந்து
தொலைபேசிகளும்
துணை நின்றன.
அலைபேசிகளும்
ஆதரவளித்தன.
எஸ். எம்.எஸ்.கள் தூதாயின.
வாட்ஸ்அப்களும்
வழியமைத்துத் தந்தன.
நிலாவை மக்கள்
மறந்த போதும்
நிலா
நேசிக்காமல் இல்லை.
இன்றும் இருக்கிறது நிலா.
தூது அனுப்ப மக்கள்
தயாராக இல்லை.