கவிதைமணி

எதிர் காலம்: பூ. சுப்ரமணியன்

கவிதைமணி

தாய்மை அடைந்த பெண்ணுக்கு
குழந்தை பிறக்கும் வரை
அது ஒரு கஷ்டகாலம்
தவழும் குழந்தை – பெண்ணுக்கு
பிறந்து விட்டால்
அந்த தாய்க்கு
அதுதான் எதிர் காலம் !

பள்ளியில் கல்லூரியில்
படிக்கும் மாணவனுக்கு
பரீட்சை வந்து விட்டால்
பயத்தில் தேர்வுக்காய்ச்சல்.
படித்த கேள்விகளே
எழுதும் பரீட்சையிலேவந்து விட்டால்
அந்த மாணவனுக்கு
அதுதான் எதிர் காலம் !

கருத்தொருமித்த காதலர்கள்
திருமணம் முடிக்கும் வரை
காதலுக்கு ஒரு கஷ்ட காலம்  
பெற்றோர் சம்மதத்தில் 
மணம் செய்யும் காலம்
வந்து விட்டால்
அந்த காதலர்களுக்கு  
அதுதான் எதிர்காலம் !

காசி ராமேஸ்வரம் தீர்த்தம்
கோவில் குளம் சுற்றும்
கும்பிடும் ஆன்மீகவாதிக்கு  
விரும்பும் மனஅமைதி
கிடைத்து விட்டால்
அந்த ஆன்மீகவாதிக்கு
அதுதான் எதிர்காலம்

படிக்க வைத்த பெற்றோர்கள்
வாழ்வில் மகிழும்படி
பிள்ளைகள் பெற்றோரைக்
கண்கலங்காமல்
கவனித்துக் கொண்டால்
அந்தப் பெற்றோருக்கு
அதுதான் எதிர்காலம் !

மனிதர்கள்...
நிகழ்காலத்தை நினைப்பதில்லை
இறந்தகாலம் மறந்து விடுவான்
எதிர்காலம் நினைத்து ஏங்குவான் !

மனித மனங்கள்  
நிகழ்காலம் எண்ணி வாழ்ந்தால்
அவனுக்கு
அதுதான் எதிர்காலம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

SCROLL FOR NEXT