கவிதைமணி

எதிர்காலம் : கவிஞர் மா.உலகநாதன்

கவிதைமணி

எதிர்காலம் என் கண்முன்னே விரிந்து 
கிடக்கிறது;எங்கும் மகிழ்ச்சி,
எங்கும் ஆனந்தப் பேருவகை.இப்படிச் 
சொல்லத்தான் ஆசை எனக்கும்;ஆனால்,
உண்ணும் சோறும் பருகும் நீரும் 
பாழாய்க்கிடக்கிறதே?

விதைத்தவன் உறங்கலாம்,
விதைகள் உறங்காது என்றார்கள்.
டெல்டாவில் நிலைமையோ,
விதையும் செத்தது,விதைத்தவனும்
செத்தான்;அவன் சாகுபடி செய்ததனால் 
சாகும்படி ஆனது;
நேர்மறை எண்ணம் தேவைதான்!

எதிர்மறையாய் இயங்கும் அரசுகளால் 
(கர்நாடக ,மத்திய  மாநில )
நினைப்பெல்லாம் நிலைகுலைந்து  போனதே ?
கேள்விக்குறியான விவசாயியின் எதிகாலத்தின் 
கூன் நிமிர்த்தி,ஆச்சர்யக்குறியாக்க
ஆவன செய்ய, படித்தோரெல்லாம்
களமிறங்குவோம்;அல்லல்படுவோரை 
ஆற்றுப்படுத்துவோம்.அதுவே,
நாம்கற்றதனாலாய பயன்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

SCROLL FOR NEXT