கவிதைமணி

நீதியைத் தேடி: பொன் . குமார்

கவிதைமணி

நீதியைத் தேடி
நீதி மன்றம் சென்றாலும் 
நிச்சயம் கிடைப்பதில்லை
நீதி.

நீதி கிடைக்குமென்றே
நம்பிக்கையிலேயே 
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
மக்கள்.

நீதி கிடைக்காத தாலேயே
மதுரையை எரித்தாள்
கண்ணகி.
நீதி கிடைக்காமல்
நெஞ்சுக்குள்ளேயே
எரிந்து கொண்டுள்ளார்கள்
இன்றைய கண்ணகிகள்.

ஐந்தறிவு பசு
நீதியைக் கேட்டதற்காக
மகனையே பழியிட்டு
நீதியை நாட்டிய 
நல்ல மன்னர்களும்
வாழ்ந்த நாட்டில்
அநீதியே
அரங்கேறி வருகிறது.

அநீதி வழங்குவதும் தவறு.
அதே போல் 
நீதி வழங்கப் படாமல்
தாமதப் படுத்துவதும் தவறு.

நீதிக்காக 
நீதிமன்றத்தில்
விசாரணைக்கு வராமலே
வழக்குகள் இலட்சக் கணக்கில்
உள்ளன.

நிதியைத் தேடுவதும்
நீதியைத் தேடுவதுமே
நித்தம் வாழ்வாகி விட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்சோ வழக்கில் பெண் உள்பட இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரியகுளத்தில் மழை

வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவா் கைது

ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

வீட்டுமனைப் பட்டாவுக்கு நிலம் ஒதுக்கக் கோரி முற்றுகை

SCROLL FOR NEXT