நீ கண் சிமிட்டினால்: மகேந்திர குமார்
எந்த திசையிலும் திரும்பாத
உன் திமிரு பிடித்த விழிகளில் தான்
தொலைந்தது என் தினசரி நாட்கள்
இருள் சூழ்ந்த மேகத்தை பிளக்கும் மின்னொளியாக
நீ கண் சிமிட்டும் போது இரத்த சிந்தும்
என் இதயத்திலும் சிறு பிளவு வீழ்ந்தது
உறங்கும் போது உன் ஊமை சிமிட்டலை
காணவே உறங்கா வாரம் கேட்டேன் நான்
உளியாக உன் விழி சிமிட்டலை கண்டு
கல்லாக நன் உடைபட்டு சிலையாக
உயிர் துறந்தேன் மண்ணிலே