நீ கண் சிமிட்டினால்: பி.பிரசாத்
குறையென்றும் எனக்கில்லை
குமரா ! என்முருகனேஉன்
கடைப்பார்வை அதுபோதும்
கரைசேர்வேன் நானெ"ன்று
இறைபக்தி மிகுதியிலே
இயம்பினாரே அந்நாளில் !
வாரியார் !
கண்ணேநீ கண்சிமிட்டும்
புகைப்படமே அதுபோதும் !
எந்நாளும் அதைவைத்து
இணையத்தில் பகிர்வாரே !
வந்தாள்என் தேவதையே !
என்பாரே இந்நாளில்!
வாரியார் !