வஞ்சம் செய்வாரோடு - பேராசிரியை செ.சுதா ராமு
கவிதைமணிவஞ்சம் செய்வாரோடு - பேராசிரியை செ.சுதா ராமு
உலகுக்கே சோறுபோட்ட உழவனை
உண்டி சுருங்க வைத்து;
கடலையே
தாய்வீடாய் நினைத்து
கட்டுமரம் கட்டிய தமிழக மீனவனை
தண்ணீரிலேயே சடலமாக்கி;
வளர்ச்சி எனும் பெயரில்
தமிழகத்தை வறண்ட மாநிலமாக்கி;
வஞ்சம் செய்வாரோடு
தினமும் வாழ்வதை விட
வாள்கொண்டு வீழ்வதே மேல் தமிழனாக!