வாழ்கையெனும் போர்க்களம்: கவிஞர் பி.மதியழகன்
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:42 PM
கலி விருத்தம்
இதயத்தை இரும்பால் கொண்ட பாவிகள்
இனத்தை அழிக்கத் துனிந்துச் செய்தானே
உதிரத்தைக் குடிக்கும் ஓநாய்கள் போலே
உயிர்களைக்கொன்றே உலவுகின் றானே!
அமைதிப் பூங்காவை அசுரர்கள் இரக்கமின்றி
அமளிதுமளி ஆக்கியே அடக்க முயன்றானே
புனித மண்ணில் விசத்தைப் பரவவிட்டானே
பதிய ஆலையாலே பேராபத்தைத் தந்தானே!
Advertisement
ஆசிரியத்துறை
மனித உயிர்களைத் துச்சமென எண்ணியே
மனித மிருகமாகவே வேட்டையாடினானே
மக்கள் துயர் கேட்காத மண்டு மாமன்னனும்
மக்கள் மனதை நொந்துபோக வைத்தானே!
ஓட்டு கேட்க ஓடிவரும்கொடும்பாவிகளும்
ஒண்ணும் தெரியாத அப்பாவிப் போலவே
ரூபாய் நோட்டக்காட்டி வாக்கு வாங்கியே
ரூபாயிக்கு தினமும் திண்டாட வைப்பானே!
குறள் வெண்செந்துறை
பார்த்துக்கொள்டா தமிழா நீயும்நல்லா
பார்த்துக் குத்து வாக்கை நீயும் வாழவே!