முகப்பு
கவிதைமணி

வாழ்க்கையெனும் போர்க்களம்: சீர்காழி .ஆர்.சீதாராமன்

Updated On : 2 ஜூன், 2018 at 6:35 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:42 PM

தாயின்   கருவறையில் 
தொடங்கி கல்லறை வரை
மனிதன் எடுத்து வைக்கும்
ஒவ்வொன்றும் போராட்டமே 

இயற்க்கையை எதிர்கொள்ள
திடீர் திடீர் உயிர் பலியை
சமாளிக்க வாழ்க்கையெனும்
போர்க்களம் போராட்டமே 

பிறப்பு படிப்பு வளர்ப்பு 
திருமணம் வேலை இப்படி
வாழ்க்கையெனும்  நிலை   
கடுமையான போராட்டமே 

Advertisement

மனிதப் பிறப்பு  என்றும் 
எதிர்கால தேடல் தேடல்
என்று  திணறும் வாழ்க்கை 
புதுக் கோண போராட்டமே

பெண் பிள்ளைகளாக
பிறந்தால் அன்று முதல் 
வாழ்வின் ஒவ்வொரு இடமும்
கட்டமும் போராட்டக்களமே
  
மாற்றுத்திறனாளி மற்றும்   
திருநங்கை என்று வந்து
விட்டால் விடியும் பொழுது
எல்லாம் போர்க்களமே.. "

முதுமையும் இயலாமையும்
துணை இல்லாத வாழ்வும்
அனாதையின் வாழ்வும்
கொடுமையான போர்க்களம். 

எதிர் நீச்சல் விடா முயற்சி
கடுமையான உழைப்பு தன்
நம்பிக்கை ஈடுபாடு மாற்றும்
வாழ்க்கையெனும் போர்க்
களத்தை    நித்தமும் .... "

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.