வாழ்க்கையெனும் போர்க்களம்: பொன். குமார்
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:42 PM
பிறப்பு முதல்
இறப்பு வரை
போராடியே வாழ வேண்டும்.
என்றும் எப்போதும் எங்கும்
எதிர்க் கொண்டே இருக்கும்
பிரச்சனை.
இடையிடையே இன்பம்
எட்டிப் பார்க்கும்.
துன்பம் என்பது
தொடர்கதையாகவே தொடரும்.
ஒன்றிலிருந்து விடுபடுவதற்குள்
புதிதொன்று பூத்து விடும்.
வாழ்க்கையெனும் பாதையில்
விபத்துகள் நேரவே செய்கிறது.
Advertisement
எல்லாம் கடந்தே
எல்லையை எட்ட வேண்டும்.
வாழ்க்கையெனும் போர்க்களத்தில்
வெற்றி தோல்வி வருவதற்குள்
வாழ்ந்துதான் ஆக வேண்டும்.