முகப்பு
கவிதைமணி

மிச்சத்தை மீட்போம்: சீர்காழி .ஆர்.சீதாராமன்

Updated On : 17 ஜூன், 2018 at 3:11 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:28 PM

வாழ்க்கை என்பதும் ஒரு
போராட்டம் போர்க்களம்
இழந்ததை விட்டு விட்டு
வாழ மிச்சத்தை மீட்போம்

எத்தனையோ டன் உணவு
தினமும் வீணாகிறது பசியும்
மறுபுறம் கூடுகிறது உணவு
மிச்சதை மீட்போம் வாரீர் 

ஆயிரம் ஆயிரம் மரங்கள்
வெட்டப்பட்டு பசுமை இழந்த
நிலையில் மரம் வளர்ப்போம்
மிச்சத்தை மீட்போம் வாரீர்

Advertisement

அள்ளிய சுரண்டிய ஆற்று
மணல் போனது போகட்டும்
இருப்பதையாவது  காத்து
மிச்சத்தை மீட்போம் வாரீர்

ஓசோனில் விழுந்த ஓட்டை
பெரிதாகி வருவதை நிறுத்த
காற்று மாசை தடுப்போம் 
ஒசோன் மிச்சத்தை மீட்போம்

இழந்த கிராம சுக போக
வாழ்க்கை போதும் மீண்டும்
உயிர் கொடுத்து கிராமத்தை
மிச்சத்தை மீட்போம்  ஆம்

விளை நிலங்கள் விலை 
வீடுகளாக மாறிய போது
பசுமை இழந்து வெப்பம் கூட
நிலம் மிச்சத்தை மீட்போம்

அடுத்த தலைமுறை வாழ
நீரையும் நிலத்தையும்
தூய காற்றையையும் 
இயற்கையையும் மிச்சத்தை
மீட்போம் பாதுகாப்போம் ...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.