கவிதைமணி

ஒரு முறையேனும்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி

கவிதைமணி

மூச்சு விட திணறுகிறது,
இந்தியாவின் மூச்சுக்காற்று ,
தலைநகரம் புது டில்லி –

“காற்று” திரைப்படம்
ஓட முடியாமல்
முளைத்தது ஒரு புது வில்லி –
அங்கே போட்டிருப்பது
தார் சாலைகளா , கார் சாலைகளா ?
நகர்ந்து கொண்டிருக்கிறது
அந்தத் தேர்
“குப்பை” என்ற அச்சாணியில் –
வாய்க்குள் புகுந்த வாகனப்புகை :
எச்சில் கூட பிசு பிசுக்கிறது –
விலங்குகளையும் விடவில்லை ஆஸ்த்மா !

அடுக்கு மாடிக்குடியிருப்புகளில்
தொட்டால் அழுக்கு ஒட்டும் மேகங்கள் !
சிறிகளால் விரட்டிக் கொண்டிருக்கிறது
 ஒரு கூட்டம் –
எந்த துக்கத்தை மனதில் வைத்து
கருப்பு சட்டை உடுத்தியது
தாஜ் மஹால் ?

மனிதக்கண்களுக்கு
ஒரு மாசுப்போர்வை
மங்கலாய் ஒரு பார்வை –
போதும் – தடுத்து நிறுத்துங்கள்—
ஒரு முறையேனும் – வாரத்தில்
ஒரு முறையேனும்  
மிதிவண்டியில் செல்லுங்கள் –
சைக்கிளுக்கு கை கொடுங்களேன்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT