கவிதைமணி

ஒரு முறையேனும்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

கவிதைமணி

ஒரு முறையேனும் ஓடும் வாழ்க்கையை
கொஞ்சம் திரும்பிப்பாருங்கள்!
வாழ்க்கை வசமாகும்!
ஒரு முறையேனும் உறவின் குரல்களுக்கு
செவிகொடுங்கள்!
உறவுகள் இனிக்கும்!

ஒரு முறையேனும் நட்பின் துயர்களுக்கு
தோள் கொடுங்கள்!
நட்பு சிறக்கும்!
ஒரு முறையேனும் குழந்தையின் கனவுகளுக்கு
உயிர் கொடுங்கள்!

மழலை மயக்கும்!
ஒரு முறையேனும் இசையின் இனிமையை
ரசித்து பழகுங்கள்!
இதயம் சிலிர்க்கும்!
ஒரு முறையேனும் உழைக்கும் உடலுக்கு
பயிற்சி கொடுங்கள்!

தேகம் வலுவாகும்!
ஒரு முறையேனும் தேசத்தின் நலனுக்கு
வாக்களியுங்கள்!
நல்லரசு உதயமாகும்!
ஒரு முறையேனும் வதங்கும் செடிகளுக்கு
நீர் இறையுங்கள்!
பசுமை வளமாகும்!
ஒருமுறையேனும் உங்களை சுற்றிய மாசுக்களை
வெளியேற்றுங்கள்!

இதயம் நலமாகும்!
ஒருமுறையேனும்  நீளும் கரங்களுக்கு
உதவிடுங்கள்!
நெஞ்சங்கள் உங்களை வாழ்த்திடும்!
ஒருமுறையேனும் தீய பழக்கங்களை
துரத்தி அடியுங்கள்!

நன்மை உங்களை பாதுகாக்கும்!
ஒரு முறையேனும் அன்பை
விளைவித்து பாருங்கள்!
ஆனந்தம் பெருக்கெடுக்கும்!
ஒருமுறையேனும் உங்கள் குழந்தைகளோடு
விளையாடிப்பழகுங்கள்!

குதூகலம் பிறப்பெடுக்கும்!
ஒருமுறையேனும் இயற்கையை
நேசித்து பாருங்கள்!
இன்பம் பெருக்கெடுக்கும்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT