கவிதைமணி

கருவில் தொலைந்த குழந்தை: பெருவை பார்த்தசாரதி

கவிதைமணி
ஆண்டுகள் பலகடந்து குழந்தைவரம் வேண்டி     ஆவலாய்க் காத்திருக்கும் தம்பதிகள் பலராவர்.!ஆண்டாண்டு காலமாய் ஆலயங்களின் முன்     அரிதான தவம்பூண்டு அரசமரத்தைச் சுற்றுவர்.!சீண்டி விளையாட பிள்ளையிலை எனும்பெரு     குறைகொண்ட மாந்தர்கள் வாழுமிவ் வுலகில்..வேண்டாமினிப் பெண்குழவி யென்றே..பிறவி     வருமுன் கருவையழிப்பார் தாய்மை அறியார்.! கருவிலிருப்பது ஆணா? பெண்ணா? வென்பதை     கண்டுகொள்வது சட்டப்படி குற்றமாம்..வளர்ந்தகருவைக் கலைப்பதுவும் குற்ற மென்பதைக்     கருத்தில் இருத்திக் கொளாத் தாய்மாருமுண்டு.!கருவிலே தொலைந்த பெண் சிசுக்களைக்      கணக்கிட்டால் கலியுகத்தின் தீமை அறியலாம்.!கருவில் தப்பிவிட்டாலோ?பின்கள்ளிப் பாலும்     கதிர்நெல்லும் கொலைக் குதவும் ஆயுதமாகும்.!உருவில் பெண்ணாயினும் உளமதில் உரமுடன்      உருமும் புலியை விரட்டியவள் தமிழ்ப்பெண்.!பெரும்பகுதி வாழ்வை வெள்ளையருக் கெதிராக      போராடிக் கழித்தவீர மங்கை வேலுநாச்சியார்.!குருவாக அண்ணலையேற்று அவரின் விடுதலைக்      கொள்கைக்குத் தியாகம் செய்த அம்புஜம்மாள்.!கருவில் தொலைந்த பெண் குழந்தையாகின்      காலமிவர்களை இன்றளவும் நினைவு கூறுமா..?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

SCROLL FOR NEXT