கவிதைமணி

யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி

கவிதைமணி

தங்கத்தொட்டிலில்
தவழ்ந்து
தாய்ப்பால் குடிக்க ஆசை –
காசை மறந்த பாசம்
அதைக்காட்டும் உறவுகள்
ஒட்டிவிட ஆசை –
இரண்டரை வயதில்
இரட்டிப்பு மகிழ்ச்சியுடன்
விளையாட்டுப்பள்ளியில்
விழுந்துருள ஆசை –
பசியே தெரியாமல்
பகட்டுத்துணிகளுடன்
படிப்பு மாளிகைக்கு
அடித்தளம் அமைக்க ஆசை –
புல் தரைகளுக்கிடையில்
“புக்” வகுப்புகளோ
“டெக்” வகுப்புகளோ,
அங்கே தான்
அறிவுத்திசுக்களைப்
பெருக்கிவிட ஆசை--
சறுக்கும் பாடத்தில்
சிறப்பு வகுப்புகள்
பெற்றுவிட ஆசை--
சிவகாசியில் சிறுவர் பலருக்கு
எல்லாம் ஆசையில்  
நின்றதோ ?
அந்தப்பிஞ்சுக்கைகளில்
பேனா இல்லையே ?
விரல்கள் பிடிக்குமே தீக்குச்சிகளை ?
இது யார் இட்ட சாபம் ? 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT