முகப்பு
கவிதைமணி

என்றும் என் இதயத்தில்: கௌதம் இராசேந்திரன்

Updated On : 27 மே, 2018 at 2:44 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:39 PM

கனவில் கார்டூனை கண்டவனுக்கு
கன்னி காதல் கனவாய் 
தோன்றிய கன்னி அவளே...
என் பெயரையே 
எழுத்துபிழையோடு கிறுக்கியவன்,
அவள் பெயரை மட்டும்
சந்திபிழை கூட இன்றி செதுக்கினேன்...

கார்டூனை தவிர எதையுமே ரசிக்காதவன்
எதை எதையோ ரசிக்க ஆரம்பித்தேன்...
மீசை அரும்பியதால் ஆசை வந்ததா??
ஆசை வந்ததால் மீசை அரும்பியதா??
அறிய அவகாசம் அவள் தரவில்லை
அவளை அறியவே அலைந்தவனுக்கு...
ஆணாய் என்னை உணர்ந்த தருணம்
என்றும் என் இதயத்தில்!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.