கவிதைமணி

என்றும் என் இதயத்தில்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

கவிதைமணி

என்றும் என் இதயத்தில் அன்பை பொழிகிறது
அன்னையின் அன்பு மொழி!

என்றும் என் இதயத்தில் இடம்பிடிக்கிறது
தந்தையின் நட்பு மொழி!

என்றும் என் இதயத்தில் இதமளிக்கிறது
என்னவளின் சைகை மொழி!

என்றும் என் இதயத்தில் முள்ளாய் குத்துகிறது
துரோகத்தின் மவுன வலி!

என்றும் என் இதயத்தில் புதைந்து கிடக்கிறது
அடங்கிப்போன ஆசைகளின் மவுனமொழி!

என்றும் என் இதயத்தில் ரணமாய் ஆறாதிருக்கிறது
நாவினால் பிறிதொருவன் சுட்ட வலி!

என்றும் என் இதயத்தில் இடம்பிடித்திருக்கிறது
குழந்தைகளின் குறும்பு மொழி!

என்றும் என் இதயத்தில் ஒளிந்திருக்கிறது
தேசத்தின் பக்தி வழி!

என்றும் என் இதயத்தில் வழிந்தோடுகிறது
இரக்கமென்னும் ஈர ஆறு!

என்றும் என் இதயத்தில் நினைவாக பூத்திருக்கிறது
பால்யத்தின் பருவ மொழி!

என்றும் என் இதயத்தில் லயித்திருக்கிறது
என் தாய் தமிழ் மொழி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்: 50 போ் கைது

தேஜஸ் போா் விமானங்களின் பயன்பாடு தற்காலிக நிறுத்தம்

தனியாா் வசம் குடிநீா் விநியோகம்: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை ஏற்க முடியாது -ஐரோப்பிய யூனியன் திட்டவட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்

SCROLL FOR NEXT