நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து நான்காம் திருவாய்மொழி - 7

நான் வளர்த்த இளங்கிளியே, உன்னை

செ.குளோரியான்

என்பு இழை கோப்பதுபோலப் பனிவாடை ஈர்கின்றது,
என் பிழையே நினைந்துஅருளி அருளாத திருமாலார்க்கு
என்பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல்,
என்புஇழைக்கும் இளங்கிளியே, யான்வளர்த்த நீஅலையே?

நான் வளர்த்த இளங்கிளியே, உன்னைப் பார்க்கும்போது எனக்கு எம்பெருமானின் நினைவுதான் வருகிறது, ஆகவே, என் எலும்பெல்லாம் சிதைந்துபோகிறது,

இன்னொருபக்கம், பனிவாடைக்காற்று எலும்பிலே நூலை நுழைப்பதுபோல் வருத்துகிறது,

ஆகவே, எனக்காக நீ ஓர் உதவி செய், நான் செய்த பிழைகளையே எண்ணிக்கொண்டு எனக்கு அருள்செய்யாமலிருக்கும் திருமாலிடம் சென்று என் நிலைமையைச் சொல், 'அவள் அப்படி என்ன பிழை செய்துவிட்டாள்?' என்று பேசி எனக்கு அருளச்சொல்,

நான் வளர்த்த கிளியே, நீதான் இவற்றை எனக்காகச் செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT