நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 6

தீவினைகளைப் புரிந்தவனான என்னுடைய

செ.குளோரியான்

வினையேன் வினைதீர் மருந்துஆனாய், விண்ணோர்
                                                                         தலைவா, கேசவா,
மனைசேர் ஆயர் குலமுதலே, மாமாயவனே, மாதவா,
சினைஏய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய், சிரீதரா,
இனையாய், இனையபெயரினாய் என்று நைவன் அடியேனே.

தீவினைகளைப் புரிந்தவனான என்னுடைய வினைகளைத் தீர்க்கும் மருந்தானவனே, விண்ணோர் தலைவனே, குடிசைகளில் வாழும் ஆயர்குலத்தின் முதல்வனே, பெரும் மாயங்களைச் செய்கிறவனே, மாதவனே, கிளைகளும் தழைகளுமாக நின்ற மராமரங்கள் ஏழையும் அம்புஎய்து துளைத்தவனே, சிரீதரனே... இப்படியெல்லாம் உன்னுடைய தன்மைகளைச் சொல்லி, பெயர்களைச் சொல்லி நான் நைவேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT