பாடல் - 9
விளம்பும் ஆறு சமயமும் அவை ஆகியும் மற்றும்
தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான்
அமரும்
வளம்கொள் தண்பணை சூழ்ந்து அழகுஆய திருக்குருகூர்
அதனை
உளம்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு
போகுறிலே.
பேசப்படுகிற ஆறு சமயங்களும் அதுபோன்ற பிறவும் சேர்ந்து பலவிதமாக வாதிட்டாலும் எம்பெருமானை, ஆதிப்பிரானை அளந்து காண இயலாது, அத்தகைய பெருமான், வளம் நிறைந்த, குளிர்ச்சியான வயல்களால் சூழப்பட்ட அழகிய திருக்குருகூரிலே எழுந்தருளியிருக்கிறார். நீங்கள் உய்வதற்கு விரும்பினால், அதனை மனத்தில் வையுங்கள்.
*******
பாடல் - 10
உறுவது ஆவது, எத்தேவும் எவ் உலகங்களும்
மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற
வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக்குருகூர்
அதனுள்
குறிய மாண் உரு ஆகிய நீள் குடக்கூத்தனுக்கு
ஆட்செய்வதே.
எல்லாத் தேவர்களும், எல்லா உலகங்களும், பிறவும் குற்றமில்லாத எம்பெருமானுடன் ஒத்து நிற்கின்றன, வயல்களிலே செந்நெல்லும் கரும்பும் ஓங்கி வளர்கிற திருக்குருகூரிலே அந்தப் பெருமான் எழுந்தருளியிருக்கிறான், குறுகிய வாமன அவதாரம் எடுத்தவன், பெரிய குடக்கூத்தில் வல்லவன், அவனுக்கு அடிமையாகித் தொண்டுசெய்வதே சிறந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.