கண்களால் காண வரும்கொல்என்று ஆசையால்
மண்கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண்கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத்
திண்கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.
கண்களால் காணும்படி எம்பெருமான் வர வேண்டும் என்று என் காதுகள் ஆசைப்படுகின்றன, ஏன் தெரியுமா? வாமனனாக வந்து மூன்றடி மண்ணைப் பெற்ற எம்பெருமான், கருடன்மீது ஏறுகிறான், அது மகிழ்ச்சியோடு செல்கிறது, அப்போது கருடனின் சிறகுகள் அசையும் ஓசை, வேதம்போல் ஒலிக்கிறது, அதைக் கேட்கவேண்டும் என்று என்னுடைய காதுகள் ஏங்குகின்றன.
•••
பாடல் 6
செவிகளால் ஆர நின் கீர்த்திக்கனிஎனும்
கவிகளே காலப்பண் தேன் உறைப்பத் துற்றுப்
புவியின்மேல் பொன் நெடும் சக்கரத்து உன்னையே
அலிவுஇன்றி ஆதரிக்கும் எனது ஆவியே.
எம்பெருமானே, உன்னுடைய புகழைச் சொல்லும் கனிகளாகிய பாடல்களைக் காலத்துக்கேற்ற பண்கள் என்னும் தேனில் தோய்த்துப் பாட வேண்டும், அதை நிறையக் கேட்க வேண்டும் என்றே என் காதுகள் விரும்புகின்றன, இந்தப் பூமியிலே, என்னுடைய உயிர், அழகிய, நீண்ட சக்ராயுதத்தை ஏந்திய பெருமானாகிய உன்னையே இடைவெளியின்றி விரும்பும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.