நாள்தோறும் நம்மாழ்வார்

ஆறாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 3, 4

என்ன வருத்தம்?

செ.குளோரியான்

பாடல் - 3

நிகர் இல் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும்
                                                                         நீள் நெடும்கைச்
சிகர மா களிறு அட்டதும் இவைபோல்வனவும்
                                                                         பிறவும்
புகர்கொள் சோதிப்பிரான்தன் செய்கை நினைந்து
                                                                         புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக்கு என்
                                                                         இனி நோவதுவே?

எம்பெருமான் ஒப்பற்ற மல்லர்களை வென்றான், பசுக்கூட்டங்களை மேய்த்தான், நீண்ட கைகளைக்கொண்ட, சிகரம்போன்ற, பெரிய குவலயாபீடம் என்ற யானையை வென்றான், இன்னும் பல திருச்செயல்களைச் செய்தான், மிகுந்த ஒளிமயமான அந்தப் பெருமானின் திருச்செயல்களை நாள்தோறும் எண்ணுகிறேன், புலம்புகிறேன், பக்தியை அனுபவிக்கிறேன், எனக்கு இனி என்ன வருத்தம்? (ஏதுமில்லை.)

***

பாடல் - 4

நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க இரங்கிற்றும்,
                                                          வஞ்சப் பெண்ணைச்
சாவப் பால் உண்டதும், ஊர் சகடம் இறச் சாடியதும்,
தேவக் கோலப்பிரான்தன் செய்கை நினைந்து மனம்
                                                         குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி
                                                         வேண்டுவதே?

யசோதைப்பிராட்டி கண்ணனை உரலோடு சேர்த்து இழுத்துக் கட்ட, அப்போது உடல் வருந்தி அழுதான் அவன், வஞ்சகமாக வந்த பூதனை என்கிற பெண் சாகும்படி அவளுடைய பாலை உண்டான், சக்கரமாக ஊர்ந்துவந்த சகடாசுரன் இறக்கும்படி உதைத்தான், அழகிய தேவர்பெருமானான அப்பிரானின் செயல்களை நினைத்து, மனம் குழைந்து வாழும் வாழ்க்கை எனக்கு அமைந்திருக்கிறது. இனி எனக்கு வேறென்ன வேண்டும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனை மையங்களைக் குறைக்கிறது ஓலா எலக்ட்ரிக்: 550-ஆக சுருக்கத் திட்டம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

மேற்கு வங்கத்தின் நிலை கவலையளிக்கிறது: மம்தா ஆட்சி மீது பிரதமா் விமா்சனம்

அய்யா வைகுண்டா் அவதார தினம்: நெல்லை, தென்காசியில் மாா்ச் 4இல் உள்ளூா் விடுமுறை

முறையான அறிவிப்பு எதுவும் இல்லை - இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு!

SCROLL FOR NEXT