நாள்தோறும் நம்மாழ்வார்

ஆறாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 11

ஏழு உலகங்களையும்

செ.குளோரியான்

பாடல் - 11

நாயகன் முழு ஏழ் உலகுக்குமாய், முழு ஏழ் உலகும் தன்
வாய் அகம் புக வைத்து, உமிழ்ந்து, அவையாய், அவை அல்லலும் ஆம்
கேசவன் அடி இணைமிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத்து இப்பத்தால் பத்தர் ஆவர் துவள் இன்றியே.

ஏழு உலகங்களுக்கும் நாயகன், பிரளயத்தின்போது ஏழு உலகங்களையும் வாயில் புகவைத்து, (வயிற்றில்) பத்திரப்படுத்தி வைத்து, பின்னர் அவற்றை உமிழ்ந்தவன், அந்த உலகங்களில் உள்ள அனைத்துமாகவும், அவை அல்லாதவனாகவும் திகழ்கிறவன், எம்பெருமான், அத்தகைய கேசவனின் திருவடிகளை வணங்கி, குருகூர்ச் சடகோபன் தூய ஆயிரம் திருப்பாடல்களைப் பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் பாடுகிறவர்கள் குற்றமில்லாத பக்தர்களாக ஆவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனை மையங்களைக் குறைக்கிறது ஓலா எலக்ட்ரிக்: 550-ஆக சுருக்கத் திட்டம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

மேற்கு வங்கத்தின் நிலை கவலையளிக்கிறது: மம்தா ஆட்சி மீது பிரதமா் விமா்சனம்

அய்யா வைகுண்டா் அவதார தினம்: நெல்லை, தென்காசியில் மாா்ச் 4இல் உள்ளூா் விடுமுறை

முறையான அறிவிப்பு எதுவும் இல்லை - இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு!

SCROLL FOR NEXT