பாடல் - 11
நாயகன் முழு ஏழ் உலகுக்குமாய், முழு ஏழ் உலகும் தன்
வாய் அகம் புக வைத்து, உமிழ்ந்து, அவையாய், அவை அல்லலும் ஆம்
கேசவன் அடி இணைமிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத்து இப்பத்தால் பத்தர் ஆவர் துவள் இன்றியே.
ஏழு உலகங்களுக்கும் நாயகன், பிரளயத்தின்போது ஏழு உலகங்களையும் வாயில் புகவைத்து, (வயிற்றில்) பத்திரப்படுத்தி வைத்து, பின்னர் அவற்றை உமிழ்ந்தவன், அந்த உலகங்களில் உள்ள அனைத்துமாகவும், அவை அல்லாதவனாகவும் திகழ்கிறவன், எம்பெருமான், அத்தகைய கேசவனின் திருவடிகளை வணங்கி, குருகூர்ச் சடகோபன் தூய ஆயிரம் திருப்பாடல்களைப் பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் பாடுகிறவர்கள் குற்றமில்லாத பக்தர்களாக ஆவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.