நாள்தோறும் நம்மாழ்வார்

ஐந்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 11

சிந்தனையோடு வணங்கும்

செ.குளோரியான்

பாடல் - 11

நாக அணைமிசை நம்பிரான் சரணே சரண்
                                                 நமக்கு என்று நாள்தொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையும்
                                                ஒர்பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ்வு எய்துவர் வைகலுமே.

ஆதிசேஷனாகிய பாம்புப் படுக்கையிலே பள்ளிகொண்டிருக்கும் நம்பிரானின் திருவடிகளே நமக்குச் சரண் என்று நாள்தோறும் ஒரே சிந்தனையோடு வணங்கும் குருகூர்ச் சடகோபன் மாறன், அப்பெருமானைப்பற்றி ஆயிரம் திருப்பாடல்களை அந்தாதியாகப் பாடியுள்ளார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் பாட வல்லவர்கள் விண்ணுக்கும் மேலான வைகுந்தத்தைச் சென்றடைந்து நித்தம் மகிழ்வார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்கள் நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் -செ.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தல்

பெரியசேமூா் நெசவாளா் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் உள்ளது - வானதி சீனிவாசன்

சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

போடி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ - பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT