நாள்தோறும் நம்மாழ்வார்

ஆறாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 11

மின்னல்போன்ற இடையை

செ.குளோரியான்

பாடல் - 11

மின்கொள்சேர் புரிநூல் குறளாய் அகல்ஞாலம் கொண்ட
வன்கள்வன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு
இன்கொள் பாடல்வல்லார் மதனர் மின் இடையவர்க்கே.

ஒளியுடைய முப்புரிநூலை அணிந்த வாமனனாக வந்து, அகன்ற உலகத்தைத் தானமாகப் பெற்றவன், வலிமையான கள்ளன், அப்பெருமானின் திருவடிகளை வணங்கிக் குருகூர்ச் சடகோபன் ஆயிரம் பாடல்களை இசையோடு பாடினார், அவற்றில் இந்தப் பத்து இனிமையான பாடல்களும் திருவண்வண்டூரைப்பற்றியவை. இவற்றைச் சொல்லவல்லவர்கள், மின்னல்போன்ற இடையைக்கொண்ட பெண்களுக்கு மன்மதன்போல் ஆவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்கள் நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் -செ.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தல்

பெரியசேமூா் நெசவாளா் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் உள்ளது - வானதி சீனிவாசன்

சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

போடி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ - பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT