நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 11

இறைவனின் தொண்டர்களே

செ.குளோரியான்

பாடல் 11

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா
அணி இழை ஆய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டு அகல்வதற்கே இரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனி உண்டு உமிழ்ந்தவன்மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்,
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே.

எம்பெருமானை விட்டுப் பிரிந்து உயிர்வாழ இயலாத, அழகிய நகைகளை அணிந்த ஆய்ச்சியர்கள், மாலைநேரத்தில் அப்பெருமானை எண்ணி இரங்கிப் பாடுகிறார்கள், எம்பெருமானைப் பிரிந்து அவர்கள் அனுபவிக்கும் துயரத்தை உணர்ந்த, அழகிய குருகூர்ச் சடகோபன் மாறன், உலகை உண்டு, உமிழ்ந்த அப்பெருமான்மீது ஆயிரம் திருப்பாடல்களைப் பாடினார். இறைவனின் தொண்டர்களே, மாறன் பாடியவற்றில் இந்தப் பத்து பாடல்களையும் உலகிலே சொல்லுங்கள், அவர் சொன்ன அந்தத் திருமாலை நெருங்கித் தொழுது வணங்கி உய்யுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

SCROLL FOR NEXT