பாடல் - 4
மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனை,
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்,
வானை உந்தும் மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே.
வானை முட்டும் மதிள் சுவர்களால் சூழப்பட்ட திருக்கண்ணபுரத்தை விரும்பி அங்கே எழுந்தருளியிருக்கிறார் எம்பெருமான், அவருடைய திருப்பாதங்கள் நமக்குப் புகலிடமாகும், ஆகவே, மானைப்போன்ற கண்களையுடைய இளம் நப்பின்னையின் கணவர், தேன்போன்ற இனிய பெருமான், அவரை வாடாத மலர்கள் இட்டு இறைஞ்சுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.