நூல் அரங்கம்

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

கோவில்பட்டி - சாத்தூர் பிரதான சாலையில் வேலாயுதபுரத்தில் ஆயுள் காப்பீட்டுக் கழக நிறுவனம் அருகே உள்ள வளாகத்தில் தனியார் தீப்பெட்டி ஆலை இயங்கி வருகிறது.

கோவில்பட்டி ராஜீவ் நகர் 5ஆவது தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் அருண் நடத்தி வரும் இயந்திரம் மூலம் தயாரிக்கும் தீப்பெட்டி ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாம்.

இதைக் கண்ட தொழிலாளர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இச்சம்பவ இடத்திற்குச் சென்ற கோவில்பட்டி தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இயந்திரத்தில் பெரும்பாலான பகுதி தீயில் கருகி நாசமாயின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயிலுக்குள் நுழையத் தடை: ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

கயானா அதிபராக மீண்டும் இா்ஃபான் அலி பதவியேற்பு

தலைமைச் செயலகம், ஆளுநா் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞா் சிக்கினாா்

சா்வதேச சட்டங்களின் கீழ் இலங்கை மனித உரிமை மீறல் விசாரணை

இணையதள பாதுகாப்பை அதிகரிக்கும் இந்தியன் வங்கி!

SCROLL FOR NEXT