8. வெண்ணிலா மதியம் தன்னை - பாடல் 7
நெஞ்சமே, வேதங்களிலும் சைவ ஆகமங்களிலும் குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளை அறிந்து கொண்டு அவ்வாறு,
நீதியால் நினை செய் நெஞ்சே நிமலனை நித்தமாகப்
பாதியாம் உமை தன்னோடும் பாகமாய் நின்ற எந்தை
சோதியாய் சுடர் விளக்காய்ச் சுண்ண வெண்ணீறு அதாடி
Advertisement
ஆதியாய் ஈறும் ஆனார் அதிகை வீரட்டானாரே
</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">நீதி = சிவபெருமானை எவ்வாறு வழிபடுவது என்று வேதங்களிலும் சைவ ஆகமங்களிலும் கூறப்படும் நெறிமுறை: தனது நெஞ்சத்திற்கு அப்பர் பிரான் அறிவுரை கூறுவதாக இந்த பதிகம் அமைந்திருந்தாலும், நமக்கு அப்பர் பிரான் அறிவுறுத்தும் பதிகம். சென்ற பாடலில் ஒவ்வொரு காலத்திலும் இறைவனைப் புகழ்ந்து பாடுமாறு, தனது நெஞ்சினுக்கு கட்டளையிடும் அப்பர் பிரான், இந்த பாடலில் தினமும் பாடுமாறு பணிக்கின்றார். நிமலன் = மலங்களின் தொடர்பு இல்லாதவன்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">நெஞ்சமே, வேதங்களிலும் சைவ ஆகமங்களிலும் குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளை அறிந்து கொண்டு அவ்வாறு, இயல்பாகவே மலங்களின் தொடர்பு அற்ற சிவபெருமானை, தினமும் வழிபட்டு தியானம் செய்வாயாக. பார்வதி தேவியை, தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக்கொண்டுள்ளவரும், சோதியாகவும், ஞான விளக்காகவும் உள்ள சிவபெருமான், சுடுகாட்டு சாம்பலைத் தனது உடலில் பூசி, தான் உலகுக்கு ஆதியாகவும் அந்தமாகவும் இருக்கும் நிலையை உணர்த்துகின்றார். இவ்வாறு ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் சோதியாக உள்ள சிவபெருமான் அதிகை வீரட்டானத்தில் உறைகின்றார்.</p>