முகப்பு
தினம் ஒரு தேவாரம்

7. வெறிவிரவு கூவிள - பாடல் 9

குறை ஏதும் இல்லாத நிறைவான தன்மை. இவ்வாறு அப்பர் பிரான் சொல்வது நமக்கு,

Updated On : 20 நவம்பர், 2015 at 12:19 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:10 PM

நிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் தன்னை நெற்றி மேல் கண் ஒன்று உடையான் தன்னை
மறையானை மாசு ஒன்று இலாதான் தன்னை வானவர் மேல் மலரடியை வைத்தான் தன்னைக்
கறையானைக் காதார் குழையான் தன்னைக் கட்டங்கம் ஏந்திய கையினானை
இறையானை எந்தை பெருமான் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே

</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">நிறைவார்ந்த நீர்மை = குறை ஏதும் இல்லாத நிறைவான தன்மை. இவ்வாறு அப்பர் பிரான் சொல்வது நமக்கு, குறைவிலா நிறைவே என்று சுந்தரரும் மணிவாசகரும் அழைப்பதை நினைவூட்டுகின்றது. திருவாசகம் கோயில் திருப்பதிகத்தின் ஐந்தாவது பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் கோதிலா அமுது என்று குறிப்பிட்டு மணிவாசகர் அமுதமும் குறை உடையது என்று நமக்கு உணர்த்துகின்றார். அமுதம் உண்ட தேவர்கள் எவரும் இறப்பிலிருந்து தப்பிக்கவில்லை: மேலும் அமுதம் தோன்றிய இடம், நஞ்சு தோன்றிய பாற்கடலாகும். ஆனால் சிவபெருமானோ எத்தைகைய குறையும் இல்லாதவர். அதனால்தான் அவரை கோதிலா அமுது என்று இங்கே மணிவாசகர் குறிப்பிடுகின்றார். குறையேதும் இல்லாமல் நிறைவாக இருப்பவனும், குற்றங்கள் இல்லாத அமுதமாக இருப்பவனும், முடிவு என்பது இல்லாமல் எப்போதும் எரியும் சுடராக விளங்குபவனும் ஆகிய சிவபெருமான், வேதத்தின் சொற்களாகவும், அந்த சொற்களின் பொருளாகவும் தனது மனதினில் நிலை பெற்று இருப்பதாக மணிவாசகர் கூறுகின்றார். கரைகள் ஏதும் இல்லாத நீர் பாய்வது போன்று, தங்கு தடை ஏதும் இன்றி தனது சிந்தையில் ஊறும் சிவபெருமான், தனது உடலில் இடம் கொண்டமையால், தான் இனிமேல் இறைவனிடம் ஏதும் வேண்ட வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் இங்கே உணர்த்துகின்றார்.</p><p align="JUSTIFY">குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே<br />மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே<br />சிறை பெறா நீர் போல் சிந்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே<br />இறைவனே நீ என் உடல் இடம் கொண்டாய் இனி உன்னை என் இரக்கேனே</p><p align="JUSTIFY">குறைவிலா நிறைவே என்று பெருமானை தனது ஆவடுதுறை பதிகத்தில் (7.70.6) அழைக்கும் சுந்தரர், தனக்குத் துணையாக வேறு எவரும் இல்லாததால் பெருமான்தான், அஞ்சல் என்று சொல்லி தனக்கு அருள வேண்டும் என்று கூறுகின்றார். நம் அனைவருக்கும்கூட, இறைவன் ஒருவன்தான் துணை என்பதை உணர்த்தும் பாடல். சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் தான் உறவாகக் கருதாததால், தனது பிழை ஒன்றினை பொறுத்து அருளினால் இறைவனுக்கு தாழ்வு ஏதும் ஏற்படாது என்று இறைவனுக்கே உணர்த்தி, தனது பிழைகளை பொறுக்குமாறு இறைவனை பணியும் பாடல்.</p><p align="JUSTIFY">குறைவிலா நிறைவே குணக்குன்றே கூத்தனே குழைக்காது உடையானே<br />உறவிலேன் உனையன்றி மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவுண்டே<br />சிறை வண்டார் பொழில்சூழ் திருவாரூர்ச் செம்பொனே திருவாவடுதுறையுள்<br />அறவனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">குறையேதும் இல்லாமல் நிறைவான குணங்களை உடையவனும், தனது நெற்றி மேல் ஒரு கண்ணினை உடையவனும், வேதத்தின் வடிவமாக இருப்பவனும், களங்கம் ஏதும் இல்லாமல் இருப்பவனும், தன்னை வணங்கிய தேவர்களின் தலைகள் மீது தனது திருவடியை வைத்து அருளியவனும், தேவர்களை காப்பதற்காக நஞ்சினை உண்டதால் கரையேறிய கழுத்தினை உடையவனும், காதினில் குழையை அணிந்தவனும், கட்டங்கம் ஏந்திய கையினை உடையவனும் ஆக்கிய இறைவன் சிவபெருமானை, பண்டைய நாட்களில் அறிவிலியாகத் திரிந்த நான் இகழ்ந்தேன். எனது செயல் தகாத செயலாகும்,</p><p align="CENTER"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.